யோகா வரலாறு - Yoga History in Tamil
யோகா வரலாறு || Yoga history in tamil essay:
Yoga History in Tamil:- இந்தியாவில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு உடற்பயிற்சி தியான நிலை தான் இந்த யோகா ஆகும். இந்த யோகாவானது நம் உடலை நிலையான தன்மையில் வைத்துக் கொள்ளவும் உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தவும் அதிக அளவில் உதவுகிறது.
இந்த யோகா என்ற சொல் சமஸ்கிருத மொழியில் “யுஜ்” என்பதில் இருந்து வந்ததாகும். யோகா என்பதற்கு பொருள் “இணைதல், சேர்தல்” என்பது பொருள்.
யோகாவின் குறிப்புகள் || Yoga history in tamil notes
• யோகாசனங்கள் செய்யும் முறை எப்போதும் இரு பக்கமும் சமச்சீராக செய்யப்படுகின்றது. முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள் அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு மாறாமல் செய்யப்படுகிறது. இதைப் பற்றிய ஆராயும் போது இரு கைகளையும் சமமான நிலையில் பயன்படுத்திய பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இருந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மூளையின் செயல்திறனை மிகவும் அதிகரிக்கிறது.
• ஒவ்வொரு யோகாசனம் செய்யும்போது நம் தொடங்கும் ஆரம்ப நிலையில் இருந்து பொறுமையாக அடுத்தடுத்து நிலைகளை கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும். பிறகு அதே முறையில் பின்னோக்கி ஒவ்வொரு நிலையை கடந்து வர வேண்டும். உதாரணமாக,1,2,3,4,5,6 என்ற முறையில் ஒரு ஆசனத்தை தொடங்கி முடித்தால் அதை வரிசையில் 6,5,4,3,2,1 என்ற முறையில் பின்னோக்கி திரும்பி அதே நிலைக்கு வர வேண்டும். இந்த மாதிரி இந்த நிலை தான் உடலுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும். இதில் ஏதாவது தவறும் பட்சத்தில் நம் உடம்பில் தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
• யோகாசன முறைகள் புவியீர்ப்பு விசையுடன் தொடர்புடையது. யோகாசன முறையை கீழ் நோக்கி அசைவுகள் மூலம் செய்வதனால் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும். ஆனால், மேல் நோக்கி அசைவுகள் மூலம் செய்தால் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படுகிறது.
யோகா வகைகள் || யோகாவின் பயன்கள் - Yoga History in Tamil:
1. கதிசங்கராசன யோகா:
இந்த யோகாசன முறையை செய்வதனால் உடலில் பல வகையான நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக உடலில் ஏற்படும் மலசிக்கல்களை இது அறவே நீக்குகிறது.
அதுமட்டுமின்றி, இந்த பயிற்சி முறையின் மூலம் முதுகெலும்பு மற்றும் இருப்பின் எலும்பு பகுதிகள் அதிக, அளவில் வலுவடைகின்றன. தோல், கை கால், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகள் நன்றாக சீரான நிலையில் காணப்படுகிறது.
2. புஜங்கசனா யோகா:
இந்த யோகாசன முறையை பெண்கள் தினசரி செய்து வந்தால் உடலில் ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் உடல் சோர் தன்மை முற்றிலுமாக நீங்கி உடலை எப்போதும் ஒரு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
இந்த ஆசன முறையை பெண்கள் அதிக அளவில் செய்வதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீரான முறையில் சரி செய்யும் ஆற்றல் மிக்கது. சிறுநீரகம், நுரையீரல் மற்றும் இதய உறுப்புகளை அதிகளவில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு உதவுகிறது.
3. கூர்மாசன யோகா:
உடம்பில் ஏற்படும் ஆசன சுவாச பிரச்சனைகள் மற்றும் செரிமான பகுதிகளை ஒழுங்கான முறையில் சீராக வைத்திருக்க இந்த கூர்மாசன யோகா முறை மிகவும் உதவுகிறது. கை, கால், விரல்கள், கழுத்து, தோல், வயிறு மற்றும் மார்பு தசைகளை சீராக வைத்து நீட்டிக்க உதவுகிறது.
எனவே, இந்த யோகா முறையை தினசரி நாம் செய்து வந்தால் உடல் மிக வலிமையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
4. மத்ஸ்யாசன யோகா:
இந்த மத்ஸ்யாசன யோகா செய்வதன் மூலம் பிட்யூட்டரி, பாரா தைராய்டு, தைராய்டு மற்றும் பினியல் சுரப்பிகளை ஒன்றாக சீரான முறையில் இயங்க வைக்க உதவுகிறது. சுவாச கோளாறு பிரச்சனைகள், கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் தசைகள் மற்றும் முதுகு தண்டுவட எலும்புகளை சீரான முறையில் வலிமை ஆக்குகிறது.
5. சேட்டு பந்த சர்வாங்காசனம்:
இந்த யோகா செய்வதன் மூலம் உடலில் உள்ள ரத்தங்கள் நல்ல முறையில் சுத்திகரிக்கப்பட்டு சீரான முறையில் இயங்குகிறது. கழுத்து, இடுப்பு, மார்ப்பு பகுதிகளில் உள்ள தசைகள் இறுக்கமாக நீட்ட உதவுகிறது.
இந்த யோக முறையை தினசரி செய்வதன் மூலம் தமனி அடைப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு விரைவில் குணமடைய செய்கிறது. நுரையீரல் மற்றும் இதய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
6. சுகாஸன யோகா:
இந்த யோகாசன முறை மனதில் ஏற்படும் கவலைகள், மன அழுத்தங்கள், உடல் சோர்வுகள் போன்ற பிரச்சனைகளை நீக்கி மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியான முறையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த மிகவும் உதவுகிறது.
இதனால், மார்பு பகுதிகள், இதயத்தின் தசை பகுதிகள் போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் சீரான இரத்த ஓட்டத்தால் இயங்குகிறது.
7. ஷலபாசனா யோகா:
இந்த யோக முறையை நாம் செய்வதன் மூலம் நமக்கு அதிக அளவில் இருக்கும் முதுகு வலி சரியாகிவிடும். குறிப்பாக முதுகு புறத்தில் இருக்கும் பின்புற தசைகளை அதிக அளவில் வலிமைப்படுத்துவதில் இந்த யோக முறை பங்கு வருகிறது.
8. பாலாசனா யோகா:
பாலாசனா யோகா செய்வதன் மூலம் நம் இடுப்பு பகுதியில் இருக்கும் தகைகள் அதிகளவு பாலம் அடைகிறது. அது மட்டுமின்றி தொடை, கனுக்கால், மணிக்கட்டு போன்ற பகுதிகளில் இருக்கும் தசைகளும் பலவீனமடைந்து நமக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு இரத்த ஓட்டம் சீரான அளவில் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் மன அழுத்தம், மன சோர்வு, உடல் சோர்வு போன்றவற்றை குறைத்து உடலை ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.
9. உஸ்ட்ராசனா யோகா:
உஸ்ட்ராசனா யோகா செய்வதன் மூலம் நம் தொடைகளில் இருக்கும் கொழுப்புகள் அனைத்தும் குறைந்து சீரான அளவில் இரத்த ஓட்டம் நடைபெறும் அதுமட்டுமில்லாமல், தோள்களையும், நரம்புகளையும் அதிக அளவில் பலப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது. இதை தவிர வயிற்றுப் பகுதிகளில் உள்ள தசைகளை விரிவு படுத்துவதும், முதுகில் ஏற்படும் வலிகளை குறைத்தும், நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குறைக்கும் திறன் உடையது.
10. சசங்காசனம்:
இந்த சசங்காசனம் செய்வதன் மூலம் நம் கைகள், தோள்கள், கால் மற்றும் பின்புற முதுகில் ஏற்படும் தசைப் பிடிப்புகள் அனைத்தும் நீங்கி விரிவுபடுத்த உதவுகிறது. இந்த ஆசன முறையை தினசரி நாம் மேற்கொண்டு வந்தால் முதுகெலும்பு மற்றும் இடுப்புகளின் பின்புறம் இருக்கும் தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க முடியும்.
11. சர்வங்காசன யோகா:
இந்த யோகாசன முறையை செய்வதன் மூலம் நமக்கு இதயத்தில் ஏற்படும் படபடப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகவும் குறையும் இதனால் நம் மாரடைப்பிலிருந்து தப்பிக்க இயலும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆசன முறையை தினமும் மேற்கொண்டால் தைராய்டு பிரச்சினை இருந்து நாம் எளிதில் விடுபடலாம்.
12. விராபத்ராசனா யோகா:
இந்த யோகாசன முறையை நாம் செய்வதன் மூலம் நம் மனதில் இருக்கும் மனக்கவலைகள், நிம்மதியின்மை அனைத்தும் நீங்கி ஒரு புத்துணர்ச்சியான நிலை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் நாம் செய்யும் செயலில் கவனம், சமநிலை போன்ற நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தும் அறிவுத்திறனை நமக்கு தருகிறது.
இந்த யோகாசன முறையை நாம் மேற்கொள்வதன் மூலம் நம் உடல் முழுவதும் எந்தவித மனக்கசப்பு தன்மையும் இன்றி சங்கடங்களை போக்கி நமக்கு ஒரு புத்துணர்ச்சியான உற்சாகத்தை தருகிறது.
13. மகரசனா யோகா:
இந்த யோகாசன முறையை மேற்கொள்வதனால் ஆஸ்துமா, நுரையீரல், இதயம், முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும். இது உடலை சோர்வடையாமல் வைத்து எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
14. உத்தன்படசனா யோகா:
இந்த யோகா முறையின் மூலம் கணையம், சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் நீரிழிவு நோய்கள் அனைத்திற்கும் தீர்வு காண இயலும். இதுமட்டுமன்றி, செரிமான உறுப்புகளை சரி செய்வது மட்டுமில்லாமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது.
15. தடாசனா யோகா:
Yoga History in Tamil:- தடாசனா யோகா செய்வதன் மூலம் முழங்கால், தொடை, கணுக்கால் மற்றும் கைகளில் உள்ள பகுதிகளை அனைத்தும் பலமடைகிறது இது மட்டும் இன்றி இடுப்புப் பகுதி கால் பாதங்களுக்கிடையே ஏற்படும் வலிகள் அனைத்தும் குறைந்து உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
16. திரிகோனசன யோகா:
இந்த யோகாசன முறையை நாம் செய்வதன் மூலம் நம் உடலில் ஏற்படும் அஜீரணக் கோளர்களை குணப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இடுப்பு, கை, கால், தொடை போன்றவற்றில் நிகழ்வு தன்மையை ஏற்படுத்துகிறது. சிறுநீரக செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுகிறது. இடுப்பு மற்றும் தொடைகளில் இருக்கும் கொழுப்பு கட்டிகளை அகற்றி விடுகிறது.
17. கோமுகசனா யோகா:
இந்த கோமகாசனை யோக முறையை நாம் தினசரி செய்வதன் மூலம் சிறுநீர் பகுதியை அதிக அளவு தூண்டுகிறது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீக்கி மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது.
18. பவமுக்தாசனா யோகா:
இந்த யோகாசன முறையை நம் தினசரி செய்வதனால் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் கொழுப்பு கட்டிகளை அகற்றி தசைகளை வலுமைபடுத்துகிறது. உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்து குடல் உறுப்புகளை மசாஜ் செய்யும் சக்தி உடையது.
19. உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தா யோகா:
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தா யோகா உரையை நம் செய்வதால் கணுக்கால் மற்றும் கால் போன்ற பகுதிகளில் உள்ள எலும்புகளை வலிமைப்படுத்துகிறது இது கால்களின் பின்புறத்தை நன்கு நீட்டி சமநிலையை பயன்படுத்த உதவுகிறது.
யோகா பற்றிய கட்டுரை pdf || Yoga history in tamil pdf
யோகா எந்த நாட்டில் இருந்து வந்தது?
Yoga History in Tamil:- யோகா என்ற சொல் வடமொழியான சமஸ்கிருதம் மொழியில் இருந்து “யுஜ்” என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது. யோகா என்பதன் பொருள் “இணைப்பது, சேர்ப்பது,பிணைப்பது” ஆகும். அதாவது, ஒருவரின் கவனத்தை சிதறவிடாமல் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்துவது ஆகும்.
சுமார் 6000-ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய ஒரு உடற்பயிற்சி முறைதான் இந்த “யோகா கலை” அல்லது “யோகாசனம்” ஆகும்.
யோகாவை கண்டுபிடித்தவர் யார்?
“பதஞ்சலி மகரிஷி” யோகாவை திட்டமிட்டு இந்தியாவில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
யோகா தந்தை யார்?
பதஞ்சலி முனியின் மகத்தான திறமைகளையும் அவர் இந்த உலகிற்கு யோகாவை எவ்வாறு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தினார் என்பதையும் விளக்குகிறார் சத்குரு.
யோகக் கலையை அறிமுகம் செய்த முனிவர் யார்?
பதஞ்சலி எனும் முனிவர் யோக கலையை முறையாக, எளிமையான முறையில் அறிமுகம் செய்தார். இவரின், யோகா சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
ஏர் கலப்பை போல் தோற்றம் உடைய ஆசனம் எது?
ஏர் கலப்பை போல் தோற்றம் உடைய ஆசனம் “சக்கராசனம்” ஆகும். இது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசன பயிற்சி நிலையாகும். இது பார்ப்பதற்கு மேற்புறமாக நோக்கி அமைந்துள்ள வில்லை போன்று அமைப்பில் தெரியும். சக்கரா என்றால் “சக்கரம்” எனவும் ஆசனம் என்றால் “நிலை” என்றும் பொருளாகும். இது ஒரு சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல்லாகும்.
யோகா என்பதற்கு என்ன பொருள்?
யோகா என்ற சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து “யுஜ்” என்ற வார்த்தையில் தோன்றிய சொல்லாகும். இதன் பொருள், “இணைப்பது, சேர்ப்பது பிணைப்பது” ஆகும். யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒழுங்குபடுத்தி ஒன்றிணைப்பது ஆகும். ஆசனம் என்ற சொல்லுக்கு “இருக்கை” என்பது பொருள் உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்க செய்யும் உடற்பயிற்சிகளையும் அதை சார்ந்த நிலையில் குறிக்க சொல்ல “யோகாசனம்”.
எது அமர்ந்த நிலை ஆசனம்?
அமர்ந்த நிலையில் செய்யப்படும் யோகாசனங்கள்:
• பத்மாசனம்
• சுகாசனம்
• பூரணா திட்லி ஆசனம்
• சித்தாசனம்
• வஜ்ராசனம்
Read Also: தமிழ் கடவுள் முருகன் உண்மை வரலாறு
