Veera pandiya katta bomman history in tamil - வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு
வீர பாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு சுருக்கம் || வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு pdf
பெயர் - வீரபாண்டிய கட்டபொம்மன்
இயற்பெயர் - வீரபாண்டியன்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு - 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி
பெற்றோர்கள் - ஜெயவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள்
மனைவி பெயர் - வீரசக்கம்மாள்
சகோதர சகோதரிகள் - ஊமைத்துரை ( குமாரசாமி), துரைசிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.
இறப்பு - 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு || கட்டபொம்மன் பிறந்த நாள்
Veera pandiya katta bomman history in tamil: 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆதிமுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இவரது, இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பது ஆகும். கட்டபொம்மன் என்பது இவருடைய பாளையக்கார வம்சாவழியை குறிக்கும் அடைமொழி ஆகும்.
இளமை காலம்:
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு, ஊமைத்துரை என்கிற குமாரசாமி, துரைசிங்கம் என்ற இரு சகோதரர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர், பாளையக்கார நாயக்கர் வம்சாவழியை சேர்ந்தவர் ஆவார்.
திருமண வாழ்க்கை:
Veera pandiya kattabomman: கட்டபொம்மன் அவர்கள் வீரசக்கம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 30-வயது வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பாளையக்காரராக அரியணையில் இருந்த காரணத்தால் தந்தைக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் கட்டபொம்மன்.
1690-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 47-வது பாளையக்காரராக அரியனையில் ஏறினார். இவர்களுக்கு, குழந்தைகள் இல்லை. கிட்டத்தட்ட ஒன்பது வருட காலம் அரசு பொறுப்பில் இருந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருடைய சந்ததி இவருடன் முடிவடைந்து விட்டது.
வீரபாண்டி கட்டபொம்மன் சாதனைகள் || ஆங்கிலேயர்களுடன் மோதல்
Veera pandiya katta pomman history in tamil: வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை பொறுப்பை ஏற்ற தருணத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினார்கள். இந்த கம்பெனியின் ஆட்சி திருநெல்வேலியிலும் உருவாகியது. இந்த தருணத்தில் தான் எட்டயபுரம் அரசரிடம் பாளையத்தில் இருக்கும் மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர் ஆங்கிலேயர்கள்.
இதன் எதிரொலியாக திருநெல்வேலி சுற்றி உள்ள பகுதிகளிலும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேயர்கள் அதற்கான நிர்வாகிகளை நியமித்தனர். பாளையக்காரர்கள் வரி கொடுக்க முடியாது என்று ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றனர். ஆனால், ஒரு சிலர் ஆங்கிலேயர்களுக்கு பயந்து அவர்களுக்கு வரி கொடுத்தனர்.
Veera pandiya katta bomman history in tamil: பாஞ்சாலங்குறிச்சியை சுற்றியுள்ள வரி கொடுத்த சில பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுகள் வந்த காரணத்தால் கட்டபொம்மனால் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த இயலவில்லை. வரி செலுத்த இயலாத காரணத்தால் திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்பி மக்களிடம் வரி வசூல் செய்ய ஆரம்பித்தார் கட்டபொம்மன். இதனால், கோபம் அடைந்த மக்கள் பலர் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி இவரை கொள்ளையர் என்று அவமானப்படுத்தினர்.
அப்போது திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரை என்பவர் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க வேண்டும் என்று நேரில் பார்க்க சென்றார் அப்போது பயங்கர கோவமடைந்த கட்டபொம்மன் ஜாக்சன் துறையிடம் “நீ தான் ஜாக்சன் துரை என்பாரோ?” என்று சரமாரியான கேள்விகளை கேட்க தொடங்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வசனம்:
Veera pandiya kattabomman: நீ தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்று ஆரம்பித்து
“வரி, வட்டி, திறை, கிஸ்தி….
யாரை கேட்கிறாய் வரி….
எதற்கு கேட்கிறாய் வரி….
வானம் பொழிகிறது… பூமி விளைகிறது…
உனக்கு ஏன் கட்ட வேண்டும் வரி…”
எங்களோடு வயலுக்கு வந்தாயா…?
நாற்று நட்டாயா…? ஏற்றம் இறைத்தாயா…?
அங்கு கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா…? மாமனா…? மச்சானா…?
மானங்கெட்டவனே…?
இது போன்ற வீரவசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் இடம் பேசி வரி கட்ட முடியாது என்று தனது வீரத்தினை வெளிப்படுத்தி ஜாக்சன் துரையை கோட்டையை விட்டு வெளியே அனுப்பினார்.
கட்டபொம்மன் நடத்திய போர்:
Veera pandiya katta bomman history in tamil: கட்டபொம்மன் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை போரில் வென்ற பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்தினால் நம்மை யாராலும் அசைக்க முடியாது என்று நினைத்த ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது போர் தொடுக்க முடிவு செய்தார்கள்.
ஆனால், இவை அனைத்தையும் முன்பே தெரிந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தனது சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார்.
இடையே கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்னதான் கட்டபொம்மன் தன்னுடைய கடுமையான சண்டையால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தாலும் இறுதியில் கட்டபொம்மனின் ராஜ்ஜியம் ஆங்கிலர்களால் சிறைபிடிக்கப்பட்டது.
தனது ராஜ்யத்தை ஆங்கிலேயர்களிடம் இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் உதவி கூறி அடைக்கலம் கேட்டார் ஆனால் அந்த மன்னனோ ஆங்கிலேயர்களுக்கு பயந்து கட்டபொம்மன் இருக்கும் இடத்தை ஆங்கிலேயர்களிடம் கூறிவிட்டார்.
இதனால், கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கபட்டார்.
இறக்கும் நிலையிலும் கூட கட்டபொம்மன் பேசிய வீர வசனங்கள்:
Veera pandiya katta bomman history in tamil: இவ்வாறு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட கட்டபொம்மனை மரத்தடியில் விசாரணை நடத்தினார்கள். தன் மீது கூறப்பட்ட குற்றங்களை அனைத்தையும் கட்டபொம்மன் மறுக்காமல் ஒத்துக் கொண்டார். அதுபோல் ஆங்கிலேயர்களிடம் தன்னை விட்டு விடுமாறு உயிர் பிச்சை எதுவும் கேட்கவும் இல்லை.
தனது வீரத்துடன் கம்பீரமாக எனது தாய் மண்ணை யாரிடமும் அடிமைப்படுத்த விரும்பாமல் எனது இன பாளையக்காரர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் திரட்டினேன் ஆனால், எதிர்பாராத விதமாக என்னால் வெற்றி பெற முடியவில்லை என கம்பீரத்துடன் கூறிய படி தூக்கமேடையை நோக்கி சென்றார் கட்டபொம்மன்.
இவ்வாறு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், தைரியத்தையும் கண்டு அங்கு சுற்றி இருந்த அனைவரின் மனதிலும் ஒரு அச்சத்தினை உருவாக்கியது. தூக்கு மேடையை நெருங்கிய தருணத்தில் “இதுபோன்று கேவலமாக சாவதை விட எனது தாய் மண்ணான பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பாதுகாப்பதற்காக போரிட்டு செத்திருக்கலாம்” என்று கடைசி வரை தனது கம்பீர பேச்சால் மன வெருப்புடன் கூறினார்.
இறப்பு || வீரபாண்டிய கட்டபொம்மன் இறந்த நாள் - Veera pandiya katta bomman history in tamil
இவ்வாறு தனது வீர வசனங்களால் கடைசி வரை ஆங்கிலேயர்களுக்கு பயப்படாமல் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி ஆங்கிலேய தளபதி ‘பேனர் மேன்’ உத்தரவின்படி கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் கொல்லப்படும்போது அவருடைய வயது-39 ஆகும்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு சின்னங்கள் || வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு
• “கட்டபொம்மன் வரலாறு” என்னும் ஒரு நூல் தமிழ்நாடு சுற்றுலா துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
• 1959-ஆம் ஆண்டு கட்டபொம்மனின் வீர வாழ்க்கையை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக சிவாஜி கணேசன் நடிப்பில் பி.ஆர்.பந்தலு தயாரிப்பில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது.
• 1799-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 200-ஆம் நூற்றாண்டு விழாவில் “தபால் முத்திரை” ஒன்று வெளியிடப்பட்டது.
• வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் அவரின் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
• கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு தமிழ் புராணம், காவியம், கவிதைகள் போன்றவை வரலாறுகளில் இடம்பெற்றுள்ளது.
• தமிழ்நாட்டில் கட்டபொம்மனின் நினைவாக வெலிங்டனில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
• பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆண்டு விழாவை கட்டபொம்மன் விழாவாக மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது.
• தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் “பண்பாட்டுக் கழகம்” என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக இயங்கி வருகிறது.
• வீரபாண்டிய கட்டபொம்மனின் அரண்மனை கோட்டையின் சில பகுதிகள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகிறது.
• கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களுக்கு, இன்னொரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
• திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் 1997-ஆம் ஆண்டு காலகட்டங்களில் “கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.
• நவீன இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாக பார்க்கப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு “ஐ.என்.எஸ். கட்டபொம்மன்” என பெயரிடப்பட்டு இயங்கி வருகிறது.
• தமிழக அரசு அவரின் நினைவை போற்றும் விதமாக 1974-ஆம் ஆண்டு ஒரு புதிய நினைவு கோட்டையை உருவாக்கியது. அந்த கோட்டை முழுவதும் அவரது வீர செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்களையும், அவரது வீர வசனங்களையும் பொறிக்கப்பட்டுள்ளது.
• ஆங்கிலேயர்களுக்கு சிறிதும் பயப்படாமல் ஆரம்ப காலத்திலேயே எதிர்த்து போரிட்ட ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய அரசாங்கத்தால் இன்றளவும் கருதப்படுகிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை தமிழ் || வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில வரிகள்:
• 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆதிமுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
• இவர், பிறந்த ஊர் பாஞ்சாலங்குறிச்சி அப்போது திருநெல்வேலி மாவட்டம், இப்போது தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.
• வீரசக்கம்மாள் என்ற பெண்ணை மணமுடித்தார். இவர்களுக்கு புத்திரன் பாக்கியம் இல்லை.
• 1790-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு 47-வது பாளையக்காரராக பஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் அரியணை பொறுப்பை ஏற்றார்.
• இவர், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் அரசராக கிட்டத்தட்ட 9-ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.
• 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஆங்கிலே தளபதி பேனர் மேஜன் உத்தரவின்படி கயத்தாறு என்னும் இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
• 1959-ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ன ஜாதி?
Veera pandiya katta bomman history in tamil: வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். 18-நூற்றாண்டில் தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட பாளையக்கார வம்சாவழியை சேர்ந்தவர் ஆவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசும் ஒரு ராஜ கம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய பூர்வீகம் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் என்பதாகும்.
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது யார்?
ஆங்கிலேயர்களிடம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை போரில் இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார். ஆங்கிலேயர்களுக்கு பயந்த விஜய ரகுநாத தொண்டைமான் என்ற அரசன் கட்டபொம்மனை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து விட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்தவர் யார்?
18-நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தான் பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையம் உருவாக்கப்பட்டது. அதே நூற்றாண்டின் இறுதியிலேயே அந்த ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டது. 1709-ஆம் ஆண்டு முதல் பதவியேற்ற கட்டபிரம்மையா 1736-வரை ஆட்சி செய்தார்.
ஊமைதுரையின் இயற்பெயர் என்ன?
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியாகிய ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி ஆகும்.
Read Also: முத்துராமலிங்கர் வாழ்க்கை வரலாறு
