பங்குனி உத்திரம் வரலாறு - Panguni Uthiram History in Tamil
பங்குனி உத்திரம் வரலாறு - Panguni Uthiram History in Tamil: பங்குனி உத்திரம் எனப்படுவது சைவக் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். இதில், 12-வது மாதம் பங்குனி மாதம் ஆகும். அதுபோன்று, 27-நட்சத்திரங்களில் 12-ஆவது நட்சத்திரம் உத்திரமாகும். இந்த இரண்டும் சேர்ந்து பௌர்ணமி திதியுடன் ஒன்றாக வரும் திருநாளை பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரம் வரலாறு:
கன்மம், ஆணவம், மாயை இவற்றை குறிக்கும் சிங்கமுகம், சூரபத்மன், தாரகாசுரன் என்ற மூன்று அரக்கர்களின் தீமைகளை ஏற்படுத்தும் முக்குணங்களை அழிக்க ஞானம் என்னும் முருகப் பெருமான் அவதாரம் எடுத்து அவர்களை போரிட்டு வெற்றி பெற்றார். இந்த நாளில் தான் தேவர் குலத்தை காத்து இந்திரனின் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்த நாளும் இந்த “பங்குனி உத்திர” திருநாளே ஆகும்.
பங்குனி உத்திரம் வரலாறு:
Panguni Uthiram History in Tamil: அசுர குலத்தை போரிட்டு அழிக்க தனது தாய் தந்தையான சிவனையும் - பார்வதியையும் முருகப்பெருமான் பங்குனி மாதத்தில் தான் வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதுபோன்று செல்லும் வழியில் மலை ஒன்று முருகப்பெருமானை முன்னோக்கி நகர விடாமல் தடுத்து நிறுத்தியது. அந்த மலை வளர்ந்து கொண்டே சென்றது. இதனால், கோபம் அடைந்த முருகப்பெருமான் அந்த மலை பற்றி நாரதரிடம் கேட்டறிந்தார்.
கிரெளசன் என்ற ஒரு அசுரன் அகத்திய முனிவரின் ஒரு சாபத்தால் மலையாக மாறி அனைவரையும் துன்பப்படுத்தி வருவதாகவும், தராகசுரனின் மாயாபுரியை அந்த அசுரனே பாதுகாத்து வருவதையும் நாரதர் மூலம் தெரிந்து கொண்டார்.
இதனால், முருகப்பெருமான் தனது படைத் தளபதி வீரபாகுவே அழைத்து தனது படையில் பாதி படையை வீரபாகுவுடன் அனுப்பி தாரகாசுரனுடன் போர் புரிய அனுப்பி வைத்தார். இதனை, தெரிந்து கொண்ட தாரகாசுரன் தன்னுடைய படைகளை அனைத்தும் ஒன்று திரட்டி போரிட தொடங்கினான். இந்த இரண்டு படைக்கு இடையே கடுமையான போர் நிலவியது.
அதன் பிறகு, தாரகாசுரன் படையின் முக்கிய தலைவனான வீரகேசரியை தன்னுடைய கதாயுதத்தால் அடித்து சாய்தான். இதனை, தெரிந்து கொண்ட வீரபாகு தாரகாசுரனை தொடர்ந்து தாக்க முற்பட்டார். ஆனால், தாராசுரன் வீரபாகுவையும் தனது அம்பால் வீழ்த்தி கீழே சாய்த்தான்.
வீரப்பாகுவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தாரகாசுரன் தன்னுடைய மாய சக்தியை பயன்படுத்த தொடங்கினான். தன்னுடைய மாய சக்தியால் எலியாக மாறி மலையின் இடையில் ஓட தொடங்கினான். இரண்டு படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. இதனால், பல வீரர்கள் மாய்ந்தனர். இதனை, தெரிந்து கொண்ட முருகப்பெருமான் தானே நேரடியாக போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். முருகனை பொடியன் என்று எண்ணிய தாரகாசுரன் மீண்டும் அசுரனாக மாறி முருகனிடம் போரிட ஆரம்பித்தான்.
கடும் கோபம் கொண்ட முருகப்பெருமான் தாரகாசுரனை தொடர்ந்து தாக்க ஆரம்பித்தார். முருகனின் தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாத தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலையில் ஓட தொடங்கினான். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணிய முருகப்பெருமான் தனது தாய் பார்வதி கொடுத்த வஜ்ரவேலைக் கொண்டு மலையை தவிடு பொடியாக்கி தாரகாசுரனை வதம் செய்து வெற்றி பெற்றார். இதனை, தெரிந்து கொண்ட சூரபத்மன் தொடர்ந்து முருகனோடு போர் புரிய தொடங்கினான். முருகப்பெருமாள் சூரபத்மனை வதம் செய்து தேவபுரியை ஆட்கொண்டார்.
அசுரர்கள் அனைவரையும் அழித்து தேவர்குலத்தை மீட்டு தேவர்களை காத்து மீண்டும் இந்திரனிடம் ஒப்படைத்தார். இந்த வெற்றியை போற்றும் வகையில் இந்திரனின் தன்னுடைய மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு பங்குனி உத்திர திருநாளில் நடைபெற்றது எனவே பங்குனி திருவிழா என்பது திருமணம் செய்ய மிகவும் நல்ல காலம் ஆகும்.
பங்குனி உத்திர திருவிழா அல்லது பங்குனி உத்திரம் கொண்டாட்டம் என்பது முருகன் கோவிலில் முருகப்பெருமான் முன்னிலையில் சிறப்பாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
பங்குனி உத்திரம் சிறப்புகள்:
• சுந்தரமூர்த்தி நாராயனாருக்கு மதுரையில் சிவபெருமானும் அன்னை பார்வதி தேவியும் மணக்கோலத்தில் காட்சி தந்து அருளிய இந்த நாளில் தான்.
• தவத்தை கலைத்ததால் இறைவனின் கோபத்தால் மன்மதன் எரிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் ரதியின் வேண்டுதலால் மன்மதன் மீண்டும் உயிர் பெற்றான். இது இந்த திருநாளில் தான் நடைபெற்றது.
• அசுரர்களை அழித்து தேவர் குலத்தை மீட்டு இந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணமுடித்த திருநாளும் இதுவே ஆகும்.
• மன்னார் - ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இந்த பங்குனி உத்திர திரு நாளாகும்.
• மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை வணங்கிய காரணத்தினால் பகவான் விஷ்ணுவின் மார்பில் உரையும் பாக்கியம் பெற்றாள்.
• அயோத்தியை ஆட்சி செய்த மன்னர் தசரதரின் மகன்கள் ஸ்ரீ ராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருதகீர்த்தி போன்றவர்களின் திருமணங்கள் இந்த பங்குனி உத்துர தினத்தன்று தான் மிதிலையில் ஒரே மேடையில் நடைபெற்றது.
• பங்குனி உத்திர திருநாளில் சில கோயிலின் தலங்களில் உள்ள கடல், ஆறு, குளம், கிணறு, ஏரி போன்றவற்றில் புனித நீராடி கடவுளை பூஜை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
• பங்குனி உத்திர தினத்தன்று திருமணம் நடைபெறாமல் இருக்கும் கன்னிப்பெண்கள் திருமண விரதம் கரை பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமண கோலத்தில் இருக்கும் கடவுளை பூஜை செய்து வழிபட்டால் அவர்களுக்கு திருமண வைபோகம் விரைவில் நடைபெறும்.
• பங்குனி மாதத்தில் கோவில்களில் ஏற்றிய மகா தீபத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சொற்பருவமாக காட்சி தருவார்கள்.
• இந்த தினத்தில் திருவிளக்கு பூஜை செய்து பாவங்கள் அனைத்தையும் போக்கி, பகையை அகற்றி புண்ணியம் பெறலாம்.
• இந்த பங்குனி உத்திர நாளில் தான் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த தினம் ஆகும். இந்த தினத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு நீர்மோர் வழங்குவது மிகவும் புண்ணியம் ஆகும்.
• தொடர்ந்து, 48-ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் கடைபிடித்தவர்களின் மறு பிறவியாக தெய்வ பிறவி அமையும் என்பது ஐதீகம்.
பழனியில் நடைபெறும் சிறப்பு:
Panguni Uthiram History in Tamil: ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா தினத்தன்று முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடு என போற்றப்படும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் முருகனுக்கு நடைபெற்று, திருவிழாவும், தேரோட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
போகரால் உருவாக்கப்பட்ட நவபாசான பழனி முருகனுக்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதியில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்படுகிறது. பங்குனி வெயிலின் வெப்பத்தால் முருகன் சோர்ந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நீரால் முருகன் குளிர்விக்கப்படுவதாக அங்குள்ள முருகனுக்கு பூஜை செய்யும் குருட்களால் கூறப்படுகிறது.
முருகன் கோயில்களில் நடக்கும் திருக்கல்யாணங்கள்:
• இந்த பங்குனி உத்திர திருநாளில் எல்லாம் முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.
• மதுரை கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.
• திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க குதிரையில் பவானி வருதல், ஸ்ரீவில்லிபுத்தூர், மோகூர் போன்ற கோவில்களில் எம்பெருமான் திருக்கல்யாணங்கள் நடைபெறுகின்றது.
panguni uthiram 2024 || பங்குனி உத்திரம் 2024 தமிழ் நாட்காட்டி
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது?
Panguni Uthiram History in Tamil: சில முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா 12-நாட்கள் பிரம்மோற்சவ திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தெய்வங்களின் திருமணங்கள் நடைபெறும் நாளாக பங்குனி உத்திர திருநாள் உள்ளது. எனவே, இந்த திருநாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமண யோகம் கைகூடு வரும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
பங்குனி உத்திரம் என்ன செய்ய வேண்டும்?
Panguni Uthiram History in Tamil: பங்குனி உத்திர திருநாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்து முருகன் மற்றும் பிற தெய்வங்களை வழிபாடு செய்தால் நன்மைகள் பெருகும். இந்த பங்குனி உத்திர திருநாள் சைவக் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் இந்த திருநாளில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் மற்றும் திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட நூல்களை படித்தால் நன்று.
பங்குனி உத்திரம் 2024 எப்போது?
2024 வருடத்தில் பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி 12-ஆம் தேதி திங்கள் கிழமை பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் ஒன்றாக இணைந்து இருக்கும் திருநாளில் வருகிறது.
முருகனின் முதல் மனைவி:
இவர்களின் முதல் மனைவி இந்திரனின் மகள் தெய்வானை ஆவாள். முருகனின் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் இச்சா சக்தி மற்றும் பிரியா சக்தி ஆகியவற்றை குறிக்கின்றனர்.
வைகாசி விசாகம் வரலாறு:
விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியது. முருகனும் ஆறுமுகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்த திருநாள் “சோதி நாள்” எனமும் அழைக்கப்படுகிறது.
