கடுக்காய் பொடி தீமைகள் - கடுக்காய் நன்மைகள், தீமைகள் - Kadukkai Benefits In Tamil
கடுக்காய் பொடி உண்ணும் முறை:
Kadukkai Benefits In Tamil:- கடுக்காயை நன்றாக அரைத்து தூள் செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு சாப்பாட்டுக்கு முன் சாப்பிட்டு வந்தால் நோய் இல்லாத நீண்ட ஆயுளை நாம் பெற முடியும். கடுக்காய் ஓட்டை நன்றாக தூளாக்கி இரவு சாப்பிட்டதும் அரை ஸ்பூன் பொடியை வாயில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல் வலிமை பெறும்.
கடுக்காய் என்றால் என்ன:
கடுக்காய் என்பது மலைப்பகுதிகளில் விளையக்கூடிய ஒரு மூலிகை பொருளாகும். இதனின் இலைகள் மற்றும் பூக்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக காணப்படுகிறது. இது நீல வடிவில் காணப்படும் ஒரு மூலிகை காய் ஆகும்.
கடுக்காய் பொடி தினமும் சாப்பிடலாமா:
கடுக்காய் பொடி தினமும் சாப்பிடக்கூடாது வாரம் 2-முறை அல்லது 3-முறை சாப்பிடலாம் இன்னும் கூறப்போனால் நார்ச்சத்து உள்ள அனைத்து காய்கறிகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
கடுக்காய் பொடி ஆண்மை:
Kadukkai Benefits In Tamil:- உடலில் தங்கி உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கடுக்காய்க்கு உண்டு. ஆண்மை அதிகரிக்க கடுக்காய் பொடி சிறந்த மருந்து ஆகும். கடுக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து கழிவுகளும் நீங்கி, மலச்சிக்கல், கபம் போன்றவை குணமாகி நீண்ட ஆயுள் நமக்கு கிடைக்கும். உடல் செல்களை புதுப்பித்து உடல்நிலை வலுவாக்கி இளமை தோற்றத்தை கொடுக்கும் சக்தி வாய்ந்தது.
கடுக்காய் பொடி உடல் எடையை குறைய:
ஆய்வாளர்களின் கருத்து படி, கடுக்காய் வயிற்றை நன்றாக சுத்தம் செய்து செரிமானத்திற்கு உதவுகிறது. இது உடலில் உள்ள அனைத்து செல்களையும் சமநிலைப்படுத்தி ஊட்டச்சத்து உறிஞ்சதலை ஊக்குவிக்கிறது. இந்த கடுக்காய் நம் உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்கி நமது எடை இழப்பிற்கு பெரிதும் உதவியது.
கடுக்காய் உடன் 1-டீஸ்பூன் சோம்பு, பெருஞ்சீரகம் போன்ற இரண்டையும் சேர்த்து நன்றாக காயவைத்து காட்சி வடிகட்டி சுத்தமான தேன் கலந்து தினசரி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கடுக்காயின் நன்மைகள்:
• இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் நீக்குவதற்கு இந்த கடுக்காய் பயன்படுகிறது.
• தோல் நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கும் இந்த கடுக்காய் தூள் பயன்படுகிறது.
• சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது.
• நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவி செய்கிறது.
• தண்ணீருடன் 1-டேபிள்ஸ்பூன் கடுக்காய் பொடி மற்றும் 1-டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து சூடேற்றி வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை குடித்து வந்தால் உடல் எடையை நாம் குறைக்கலாம்.
• தலைகளில் உள்ள பேன் மற்றும் பொடுகு போன்றவற்றை சரி செய்யவும் கடுக்காய் தூள் பயன்படுகிறது.
• பித்த கோளாறுகள் மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
• உடல் சூட்டை தணிக்கவும், உடம்பில் நீர்ச்சத்தை அதிகப்படுத்தும் உதவுகிறது.
• மூட்டுவலியை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
• வாய் துர்நாற்றம் மற்றும் பல்வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
• கண் பார்வை பிரச்சனைகளை சரி செய்கிறது.
• கல்லீரல், மண்ணீரல், கல்லீரல் வீக்கம், மற்றும் குடல் புழுக்கள், குடல் புண்கள் போன்ற பல பிரச்சனைகள் கடுக்காய் சாப்பிடுவதனால் குணமடைகிறது.
கடுக்காய் பொடி தேன்:
கடுக்காய் தூள் உடன் சிறிது அளவு சோம்பு ( பெருஞ் சீரகம் )சேர்த்து மண் பானையில் நீரை ஊற்றி நன்றாக காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதனுடன், சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கடுக்காய் லேகியம் நன்மைகள்:
உண்மையை கூற வேண்டுமானால், கடுக்காய் லேகியம் சாப்பிட்டால் இளம் நரை, நரைத்த தலை முடி போன்றவை நன்றாக கருமை நிறத்தில் வளரும். பழங்காலங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு உறுதியாக இருக்க கடுக்காய்கள் கலவைகளுடன் சேர்த்து கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.
சுமார், 5000-ஆண்டுகளுக்கு முன்பே கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள் சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது கடுக்காய் விதையை நீக்கி பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயின் வகைகள்:
Kadukkai Benefits In Tamil:- கடுக்காயில் பல வகைகள் உள்ளது. அவை,
1. செங்கடுக்காய் - காசநோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தி மெலிந்த உடல்நிலையை நல்ல நிலைமைக்கு கொண்டுவரும்.
2. பிஞ்சு கடுக்காய் - உடலில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கி மலத்தை இழக்கும் தன்மை கொண்டது. நம் உடலுக்கு அழகு சேர்க்கும் பொருளாகவும் இருக்கிறது.
3. வரி கடுக்காய் - நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் அதிகளவு விந்தணுக்களை சேகரிக்க உதவுகிறது.
கடுக்காய் பொடி எப்படி செய்வது:
• முதலில் கடுக்காயை நாம் சூரிய ஒளியில் படுமாறு நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
• காய வைத்த கடுக்காயை உரலில் போட்டு இடித்து அதனுடைய விதையை தனியாக நீக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த விதையில் நச்சுத்தன்மை இருக்கும்.
• விதயை நீக்கிய கடுக்காயின் மேல் பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு அதனை, தண்ணீர் இல்லாமல் நன்கு துடைத்து விட்டு ஒரு மிக்ஸியில் பவுடர் போல் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
• பொடியான பிறகு அதை காற்று போகாத ஒரு பாத்திரம் அல்லது பாட்டில்களில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடுக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
கடுக்காய் ஒரு மருத்துவ குணமிக்க மூலிகை பொருள் ஆகும். இதை நாம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது. இருந்தாலும், இதில் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இந்த கடுக்காயை அதிகளவு நாம் உட்கொள்வதால் நம் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.
கடுக்காய் பொடி தீமைகள்:
• கடுக்காய் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடலில் புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
• நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக கடுக்காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், சர்க்கரை நோயாளிகள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது மிகவும் நல்லது.
• ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடும் போது அவர்களுக்கு சேராமல் காய்ச்சல், வாந்தி, குமட்டல், நீர் இழப்பு மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.
• கடுக்காயை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது இன்று வரை யாராலும் கூறப்படவில்லை. சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் அறிவுரைகளை கேட்டு சாப்பிடுவது நல்லது.
• நம் அன்றாட வாழ்வில் எதார்த்தமாக கடுக்காய் சாப்பிடும் போது ஏதேனும் பக்க விளைவுகள் நம் உடலில் ஏற்பட்டால் கடுக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
• கடுக்காய் பொடியை வீட்டில் செய்யும் போது அதன் விதையை நீக்கிவிட்டு தான் செய்ய வேண்டும். ஏனென்றால், அந்த விதையில் அதிக அளவு நச்சு உள்ளது.
மருத்துவ குறிப்பு:
கடுக்காய் பொடி எப்படி சாப்பிட வேண்டும்?
Kadukkai Benefits In Tamil:- கடுக்காய் பொடியை சம அளவு பிரித்துக் கொண்டு நெய்யில் நன்றாக வருத்து உட்புடன் கலந்து 2-கிராம் அளவில் சாப்பிட்டு வரும் வேளையில், வயிற்றுப்புண், கல்லீரல் வீக்கம், வயிற்று புழுக்கள் போன்ற பல பிரச்சனைகள் சரியாகும். இரவில் தூங்குவதற்கு முன் கடுக்காய் தூள் 1-டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கபம் எனப்படும் சிலோத்துமத்தை ஒழுங்கு படுத்துகிறது.
கடுக்காய் நன்மைகள் என்ன?
கல்லீரல் வீக்கம், வயிற்றுப்புழுக்கள், சளி, இருமல் ,காய்ச்சல், ஜலதோஷம், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற அனைத்து விதமான சுவாச பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
Read Also:- கருங்காலி மாலை தீமைகள் || கருங்காலி மாலை பயன்கள்
